search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு வெடிக்கும் நேரம்"

    தீபாவளி நாளில் பட்டாசுகள் வெடிப்பது தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ள தமிழக அரசு, தொடர்ந்து வெடிக்கும் சரவெடிகளை வெடிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. #Diwali #CrackersBurstingTime #TNGovernment
    சென்னை:

    தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த 2 மணி நேரத்தை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்றும் கூறியிருந்தது. அதன்படி, இன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு அறிவித்தது. காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என கூறியுள்ளது.



    மேலும், வெடி வெடிப்பதற்கான பல்வேறு அறிவுறுத்தல்களையும் தமிழக அரசு வழங்கி உள்ளது. அவை வருமாறு:-

    • அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்

    • குறைந்த ஒலி எழுப்பும், குறைந்த அளவில் மாசுபடுதல் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும்

    • மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்

    • குடிசைப் பகுதி மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் வெடி வெடிப்பதை தவிர்க்க வேண்டும்

    • உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற்று திறந்தவெளியில் மக்கள் ஒன்றுகூடி கூட்டாக வெடி வெடிக்கலாம்

    • திறந்த வெளியில் கூட்டாக வெடி வெடிப்பற்கு அந்தந்த பகுதியில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம். #Diwali #CrackersBurstingTime #TNGovernment
    தமிழகத்தில் தீபாவளி நாளில் காலையில் ஒரு மணி நேரம், இரவில் ஒரு மணி பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை தமிழக அரசு இறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #Diwali #CrackersBurstingTime
    சென்னை:

    பட்டாசு தயாரிப்பு, விற்பனை மற்றும் வெடிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 23ம் தேதி தீர்ப்பு வழங்கியது. தீபாவளி மற்றும் பிற விழாக்களில் நாடு முழுவதும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை 35 நிமிடங்களுக்கு மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

    இந்த தீர்ப்பு தீபாவளி கொண்டாடும் இந்துக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீர்ப்பை எதிர்த்து பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்கக்கோரி தமிழக அரசும் மனுதாக்கல் செய்தது. ஆனால், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க முடியும் என்றும், அந்த 2 மணி நேரம் எது என்பதை மாநில அரசே முடிவு செய்யலாம் என்றும் கூறியது.

    அதன்பின்னர், நேற்று முன்தினம் புதிய அறிவுரை ஒன்றை உத்தரவாக வெளியிட்டது. அதில், தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று அதிகாலையில் 4 மணி முதல் 5 மணி வரை, இரவில் 9 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என கூறியிருந்தது. இந்த நேரத்தில் மாநில அரசு மாற்றம் செய்யலாம் என்றும் கூறியிருந்தது.



    அதன்படி மாநில அரசு ஆலோசனை நடத்தி பட்டாசு வெடிக்கும் நேரத்தை இன்று அறிவித்துள்ளது. அதாவது, காலையில் 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என கூறியுள்ளது.

    மேலும் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பதற்கான பல்வேறு அறிவுறுத்தல்களையும், எந்தெந்த இடங்களில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது. #Diwali #CrackersBurstingTime
    தமிழகத்தில் தீபாவளியன்று காலை ஒருமணி நேரமும், இரவு ஒருமணி நேரமும் பட்டாசு வெடிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. #Diwali #SupremeCourt
    புதுடெல்லி:

    தீபாவளி சமயத்தில் பட்டாசுகள் வெடிப்பதால் காற்றில் மாசு ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்படுவதாக கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

    இதையடுத்து கடந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் இந்த ஆண்டும் தீபாவளிக்கு பட்டாசுகள் தயாரிக்க, விற்க, வெடிக்க அனுமதிக்கக் கூடாது என்று டெல்லியைச் சேர்ந்த சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை கடந்த ஆகஸ்டு மாதம் நிறைவு பெற்றது. கடந்த 23-ந்தேதி இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    தீபாவளி மற்றும் பிற விழாக்களில் நாடு முழுவதும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை 35 நிமிடங்களுக்கு மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசும் பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்தது.

    தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவதை மக்கள் வழக்கத்தில் வைத்துள்ளனர். எனவே தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று அதிகாலையில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்க வேண்டும்.

    சுப்ரீம்கோர்ட்டு இரவு மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பதால் தமிழக மக்கள் தங்களுக்கு இருக்கும் பட்டாசு வெடிக்கும் உரிமையை இழந்துள்ளனர். மேலும் இரவில் 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்கும் நிலை ஏற்பட்டால் ஒரே நேரத்தில் அதிகளவில் புகை மாசு ஏற்பட வழி ஏற்பட்டு விடும்.

    எனவே இதை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அதிகாலையில் 4.30 மணி முதல் 6.30 மணி வரை பட்டாசு வெடிக்க மக்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு தமிழக அரசு கூறி இருந்தது.

    தமிழக அரசின் மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம்கோர்ட்டில் நடந்தது. நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக்பூசன் ஆகியோர் கொண்ட பெஞ்சில் விசாரணை நடத்தப்பட்டது.

    நீதிபதிகள் தீர்ப்பு அளிக்கும்போது தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர். நீதிபதிகளின் தீர்ப்பு விவரம் வருமாறு:-

    தீபாவளி பண்டிகை தென் மாநிலங்களில் ஒரு நேரத்திலும், வட மாநிலங்களில் மற்றொரு நேரத்திலும் கொண்டாடப்படுவதால் தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை மேலும் 2 மணி நேரத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்பதை ஏற்க இயலாது. தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்கப்பட வேண்டும்.

    நேரத்தை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் 2 மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிக்க அனுமதிக்க முடியாது என்பதில் கோர்ட்டு தெளிவாக உள்ளது.

    தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் அந்த 2 மணி நேரத்தை தங்கள் மாநிலத்திற்கு ஏற்ப அம்மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு காரணமாக தமிழ்நாட்டில் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி அளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டது. இது தொடர்பாக நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “ அனைவரது கருத்துக்களையும் கேட்டு அறிந்தபிறகு பட்டாசு வெடிப்பதற்கான நேரம் முடிவு செய்யப்படும்” என்று கூறினார்.

    இதைத் தொடர்ந்து சட்ட நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இன்று அல்லது நாளை பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது.



    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு இன்று பட்டாசு வெடிப்பதற்கான புதிய அறிவுரை ஒன்றை உத்தரவாக வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று காலையில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரமும் பட்டாசுகள் வெடிக்கலாம். இதற்கான நேரம் வரையறுத்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி தீபாவளி தினத்தன்று அதிகாலையில் 4 மணி முதல் 5 மணி வரை பட்டாசுகள் வெடிக்கலாம். இரவில் 9 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம்.

    ஆனால் காலை 1 மணி நேரம்,இரவு 1 மணி நேரம் என்பது நாங்கள் சொல்லும் அறிவுரைதான். எனவே தமிழ்நாட்டில் எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்பதை அம்மாநில அரசு ஆலோசித்து இறுதி முடிவு எடுத்துக் கொள்ளலாம்.

    நேரத்தை எப்படி மாற்றிக்கொண்டாலும் 2 மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிக்கக் கூடாது. இந்த நேர ஒதுக்கீட்டில் சுப்ரீம் கோர்ட்டு உறுதியாக உள்ளது.

    தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக கலெக்டர்கள் முதல் வி.ஏ.ஓ.க்கள் வரை அனைத்து அதிகாரிகளும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும்.

    விதிகளை யாரும் மீறக் கூடாது. அப்படி மீறும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு பட்டாசு பிரியர்களிடம் மேலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே தீபாவளி தினத்தன்று 2 மணி நேரத்திற்குதான் பட்டாசு வெடிக்க முடியுமா? என்று பெரும்பாலானவர்கள் ஆதங்கத்துடன் உள்ளனர்.

    இந்த நிலையில் இரவில் 1 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தற்போதைய புதிய உத்தரவில் கட்டுப்பாடு வந்துள்ளது. கடந்த 23-ந்தேதி சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்தபோது இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று கூறி இருந்தது.

    ஆனால் இன்று வெளியிட்டப்பட்ட புதிய உத்தரவில் இரவு 9 மணி முதல் 10 மணி வரை 1 மணி நேரத்திற்கு மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பொதுவாக தீபாவளி தினத்தன்று இரவில் 7 மணிக்கு ஆரம்பித்து 10 மணி வரை ஜாலியாக பட்டாசு வெடிப்பார்கள். ஆனால் சுப்ரீம்கோர்ட்டின் புதிய உத்தரவால் தீபாவளி அன்று இரவு ஒரே ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே பட்டாசு வெடிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த அவகாசம் வெற்றி பெறுமா? என்பதற்கு தீபாவளி இரவுதான் விடை சொல்லும். #Diwali  #SupremeCourt
    தமிழகத்தில் தீபாவளி நாளில் 2 மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. #Diwali #DiwaliCrackers #CrackersBurstingTime #SupremeCourt
    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பட்டாசுகளை தயாரிக்கவோ விற்பனை செய்யவோ, வெடிக்கவோ தடை இல்லை என தீர்ப்பளித்தது. அதேசமயம், பட்டாசுகளை தயாரிக்கவும் வெடிக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

    குறிப்பாக தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது இரவு 11.30 மணி முதல் இரவு 12.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என நிபந்தனை விதிக்கப்பட்டது. மேலும், பட்டாசு தயாரிக்கவும், விற்பனை செய்யவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.



    இந்த தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழக அரசின் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு வக்கீல் பா.வினோத் கன்னா மனுவை தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், கோர்ட்டு உத்தரவின்படி குறைந்த அளவு நேரமான 2 மணி நேரத்தில் பட்டாசு வெடிக்கும் போது ஒரே நேரத்தில் அனைவரும் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பெருமளவில் மாசுக்கேடு விளைவிக்கும் என்றும், தீபாவளியின் போது தமிழ்நாட்டில் வசிக்கும் மக்கள் அன்று கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க (அதிகாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை) அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    அந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் அரசு வக்கீல் பா.வினோத் கன்னா கோரிக்கை விடுத்தார்.

    இதேபோல் பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பான நிபந்தனைகளை தளர்த்தக்கோரி சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த இரண்டு மனுக்களும் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி என்றும், எந்த 2 மணி நேரம் என்பதை அரசு முடிவு செய்யலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    காலையில் ஒன்றரை மணிநேரம், மாலையில் ஒன்றரை மணி நேரம் அனுமதி வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

    பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்த தமிழக மக்கள் இந்த தீர்ப்பினால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். #Diwali #DiwaliCrackers #CrackersBurstingTime #SupremeCourt

    ×